in

தொழில் முதலீடுகளை ஏற்க அமெரிக்க சென்றுள்ள தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள் – ஓபிஎஸ்

தொழில் முதலீடுகளை ஏற்க அமெரிக்க சென்றுள்ள தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள் – ஓபிஎஸ்

திருச்சி மாவட்டம், முசிறியில் ஓபிஎஸ் அணி தெற்கு மாவட்ட செயலாளர் ராஜ்மோகன் இல்ல திருமண விழா நடைபெற்றது.விழாவில் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர் சந்திப்பில் ஓபிஎஸ் பேசியதாவது.

அரசு பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவில் முன் செய்த தீவினைப் பயனால் மாற்றுத்திறனாளியாக பிறப்பதாக சொற்பொழிவாளர் ஒருவர் பேசிய நிகழ்வு சர்ச்சையாகி உள்ளது. அது குறித்து உங்களது கருத்து என்ன?

இந்தியா, தமிழகம் மதச்சார்பற்ற ஜாதி வேறுபாடு அற்ற தமிழகமாக உள்ளது. யாரையும், பிரித்துப் பார்த்து பேச கூடாது. ஜாதி, பேதம் அற்ற சமுதாயத்தில் மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று கூறினார்.

2026 இல் வரவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் துவக்கி விட்டீர்களா?

2026 – ல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நிறுவிய புரட்சித்தலைவி ஜெயலலிதா வளர்த்த இக் கட்சிக்கு எத்தகைய இடையூறு வந்தாலும் அதனை வென்று அதிமுக அரியணையில் ஏறும் என்று கூறினார்.

திமுகவினர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி உயர்வு கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பது குறித்த கேள்விக்கு திமுகவினர் மெஜாரிட்டியாக ஆட்சி நடத்தி வருவதால் வாரிசு அரசியல் நடத்த வேண்டும் என்ற நோக்கில் பேசி வருகின்றனர்.

விஜய் அரசியலில் ஜெயிப்பாரா?

நான் ஏற்கனவே மூன்று முறை இது குறித்து கூறியிருக்கிறேன் தற்போதும் சொல்கிறேன் விஜய் அரசியல் இயக்கம் தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜய் நடித்த கோட் திரைப்படம் பார்த்தீர்களா?

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்தியதன் பிறகு திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வரின் செயல்பாடு குறித்து உங்கள் கருத்து?

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ள தமிழக முதல்வர் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருவார் என நம்புகிறேன்.தமிழக முதல்வருக்கு எனது வாழ்த்துக்கள்.

முன்னதாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு கட்சியினர் பூரண கும்ப மரியாதை அளித்தும்,
பதாகை வைத்தும் சண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்

What do you think?

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை சாலை விபத்து சிசிடிவி காட்சிகள்

கழிப்பிடக் கழிவுகளை காவிரி ஆற்றில் விட ஏற்பாடு – பொதுமக்கள் அதிர்ச்சி