in

78- வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நெல்லையில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பேரணி

78- வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நெல்லையில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பேரணி

 

78- வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நெல்லையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. பேரணியில் காங்கிரஸ் தொண்டர்கள் மூவர்ணக் கொடி ஏந்தி சென்றனர்.

78- வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நெல்லையில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கினர்.

பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட்புரூஸ், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மாநில வழக்கறிஞர் அணி இணைத் தலைவர் மகேந்திரன், மாநில இளைஞரணி செயலாளர் விஷ்வாபாய் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மூவர்ண கொடி ஏந்தி பேரணியில் சென்றனர்.

வண்ணார்பேட்டையில் தொடங்கிய பேரணி மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு நிறைவுபெற்றது.

தொடர்ந்து அங்கு நடந்த விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட்புரூஸ் தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

What do you think?

பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ராமகிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி மரியாதை