in , ,

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை…

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை…

பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை ஒடிசா கடலோரம் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அரபிக்கடலில் நிலவும் சுழற்சி காரணமாக வலுப்பெற்றுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு, தென்மேற்கு காற்றின் திசை மாறுபாடு காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது.

இன்று நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான “RED ALERT” விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான “ORANGE ALERT” விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான “YELLOW ALERT” கொடுக்கப்பட்டுள்ளது.

நாளை நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான “ORANGE ALERT” கொடுக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு கனமழைக்கான “YELLOW ALERT” கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் அனேக இடங்களிலும் உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை மதுரை விமான நிலையத்தில் 36.3 degree செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 18.8 degree செல்சியஸ் பதிவாகியுள்ளது.

நேற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தெற்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய விதர்பா நிலா பகுதிகளில் நிலவுகிறது.

ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஜூலை 19 தேதி வாக்கில் உருவாக வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30-40 km வேகத்திலும் வீசக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுகல் மாவட்ட மலைபகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 degree செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 degree செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகளின், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 km வேகத்திலும் இடையிடையே 55km வேகத்திலும் வீசக்கூடும்.

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 km வேகத்திலும் இடையிடையே 65km வேகத்திலும் வீசக்கூடும்.

தெற்கு, மத்திய வங்கக்கடல் மற்றும், வடக்கு அந்தமான் கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 km வேகத்திலும் இடையிடையே 55km வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 km வேகத்திலும் இடையிடையே 65km வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென் அரபிக்கடல் பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 km வேகத்திலும் இடையிடையே 55km வேகத்திலும் வீசக்கூடும்.

What do you think?

ஆனித் திருமஞ்சன விழாவினையொட்டி ஜய்யங்குள தீர்த்தத்தில் தீர்த்தவாரி மேற்கொண்ட அண்ணாமலையார்

தஞ்சையில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பொன். மாணிக்கவேல் பேட்டி