in

தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு சாக்லேட் அலங்காரத்துடன் தீபாராதனை

தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு சாக்லேட் அலங்காரத்துடன் தீபாராதனை

 

புவனகிரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு சாக்லேட் அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது.

பல்வகை சாக்லேட்டுகள் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சித்திரை 1 தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று அம்மனுக்கு சாக்லேட் அலங்காரம் செய்து தீபாரதனை காட்டப்பட்டது.

இதில் மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பல்வகை சாக்லேட் இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

அதேபோன்று தோரணங்களும் சாக்லேட்டால் அலங்கரிக்கப்பட்டது இதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழுங்க அம்மனுக்கு பஞ்சமுக தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோன்று பரிவார தெய்வங்களுக்கும் சாக்லேட் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது இதில் புவனகிரி சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக வந்து சுவாமியின் சாக்லேட் அலங்காரத்தை கண்டு ரசித்து அம்மனின் அருளாசி பெற்று சென்றனர்.

What do you think?

பா.ஜ.க மற்றும் த.வெ.கயினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி

ஏழுமலையானுக்கு தலை முடி சமர்ப்பித்து உறுதிமொழி ஆவணத்தில் கையெழுத்திட்டு வழிப்பட்டார்