in

மயிலாடுதுறையில் நிறுவனத்தை கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் நிறுவனத்தை கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், சமீபத்தில் தற்கொலை செய்து இறந்த அஞ்சலக ஊழியர் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்றது :-

சமீபத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அஞ்சல் ஊழியர் சுமதி என்பவர், அதிகாரிகள் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டார் இவரது மரணத்திற்கு நீதி கேட்டும், பாதிக்கப்பட்ட ஊழியர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும், அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் தலைமை தபால் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். சங்கத்தின் கோட்டத் தலைவர் ஜி மதியழகன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்

What do you think?

தமிழக அளவிலான,13-வயதிற்கு உட்பட்டோருக்கான பேட்மிட்டன் போட்டி 400 க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபெறும் இந்த போட்டி 5 நாட்கள் நடைபெறுகிறது.

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 21-09-2024