in

தமிழ்நாடு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 

தமிழ்நாடு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருவாரூரில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டும் என திமுக தலைவரும் திராவிட மாடல் நாயகன் தளபதியார் அறிவுறுத்தலின் பேரில் திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஒன்றிய, நகர, பேரூர், கழக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக வஞ்சிக்காதே வஞ்சிக்காதே தமிழ்நாட்டை வஞ்சிக்காதே, வரி என்றால் இனிக்குது, நிதி என்றால் கசக்குதா உள்ளிட்ட கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தமிழக முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் டி ஆர் பி ராஜா பேட்டி

காவிரியில் தமிழகத்திற்கான நீரை பெற்றுத்தர கர்நாடகா அரசை நிர்பந்தம் செய்ய வேண்டும் – காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை திருச்சியில் பேட்டி