in

பங்குச்சந்தையில் ஊழ்லை கண்டித்து காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்


Watch – YouTube Click

பங்குச்சந்தையில் 38 இலட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மணிக்கூண்டு பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தியாவில் 5 கோடி மக்களிடம் 38 இலட்சம் கோடி ரூபாய் பங்குச்சந்தையில் மாபெரும் ஊழல் நடைபெற்று இருப்பதாக மோடி மற்றும் அமித்ஷாவை கண்டித்து திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் மணிக்கூண்டு பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வைத்து கருத்துக்கணிப்புக்கு பின்னர் இது பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் இதற்கு காரணமான பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இன்று நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மோடி அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். முகமது அலியார், அப்பாஸ் மந்திரி, காஜாமைதீன், ரோஜா பேகம், பாரதி, வேங்கை ராஜா, மதுரை வீரன், காளிராஜ், நிக்கோலஸ், ஜோதி ராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

திரையரங்கில் தவறவிட்ட நகை உரியவர்களிடம் ஒப்படைப்பு காவல்துறையிடம் கொடுத்த நபருக்கு பாராட்டு

நடிகர் TR மகாலிங்கம் பத்திரிக்கையாளர் சந்திப்பு