in

மதுரையில் முதல் நாள் விநாயகர் சிலை ஊர்வலம் கோலகலமாக கொண்டாடிய பக்தர்கள்

மதுரையில் முதல் நாள் விநாயகர் சிலை ஊர்வலம் கோலகலமாக கொண்டாடிய பக்தர்கள்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகரில் இந்து மக்கள் கட்சி சார்பாக பல்வேறு இடங்களில் 1 அடி முதல் 9அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.. அதில் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அந்த சிலைகளை கரைக்க முடிவு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து 24 பெரிய சிலைகள் மற்றும் ஒரு அடி உயரம் கொண்ட 108 சிறிய விநாயகர் சிலைகள் இன்று மாலை கீழமாசி வீதி விளக்குத்தூண் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து ஊர்வலமாக மாசி வீதியில் வலம் வந்தது. அதில் 108 சிறிய சிலைகளை பெண்கள் தூக்கி கொண்டு வந்தனர்.இதையொட்டி காவல்துறை துணை கமிஷனர் கரண் மற்றும் மதுக்குமாரி ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

பின்னர் விநாயகர் சிலைகள் அனைத்தும் சிம்மக்கல் வழியாக வைகை ஆற்றின் தென்கரை பகுதியை வந்தடைந்தன அங்கு சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாக வைகை ஆற்றில் கரைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இலங்கை முன்னாள் எம்.பி.யோகேஸ்வரன் மற்றும் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

What do you think?

மகாவிஷ்ணு ஆற்றியது ஆன்மீக சொற்பொழிவு அல்ல அது சனாதன சொற்பொழிவு

மதுரை ஒத்தக்கடையில் நடந்த விழாவில் 11,500 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.