வால்பாறையை சேர்ந்த பறவை காவடி எடுத்து அந்தரத்தில் தொங்கியபடி வந்த பக்தர்கள்
பழனி கோயில் தைப்பூசத் திருவிழாவை ஒட்டி வால்பாறையை சேர்ந்த பறவை காவடி எடுத்து அந்தரத்தில் தொங்கியபடி வந்த பக்தர்கள்- காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி விமர்சையாக நடைபெற்று 14 ம்தேதியுடன் நிறவடைந்த்து. தைப்பூச திருவிழாவா முடிந்தும் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
மலையடிவாரத்தில் மயில் காவடி, மலர் காவடி, பால் காவடி என பல்வேறு காவடிகளை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து வந்த பக்தர்கள் சண்முக நதியில் இருந்து புனித நீராடி விட்டு அலகு குத்தியும், பறவை காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
பெரிய கிரேன் வாகனத்தில் உடல் முழுவதும் கத்திகளை குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி பக்தர்கள் மலையடிவாரத்தில் கிரிவலம் வந்தனர். அந்தரத்தில் தொங்கியபடி பக்தர்கள் வருவதை ஏராளமானோர் கூடி நின்று மெய்சிலிர்க்க பார்த்தனர்.