in

பிரதோஷ வழிபாட்டிற்காக சதுரகிரி கோவிலில் குவிந்த பக்தர்கள்….

பிரதோஷ வழிபாட்டிற்காக சதுரகிரி கோவிலில் குவிந்த பக்தர்கள்….

 

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது .

இந்த கோயிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 10 பக்தர்கள் வரை உயிரிழந்தனர். இதனை அடுத்து மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை மொத்தம் 4 நாட்களுக்கு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டுள்ளது.

இன்று புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோவிலில் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திடீரென மழை பெய்தால் பக்தர்கள் கோயிலுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் மலைப் பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும், கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் குளிப்பதற்கு அனுமதி இல்லை எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

யுனைடெட் யோகா மற்றும் ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பில் காய்கறி மற்றும் கனிகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வு

மயிலாடுதுறை காலை முதல் கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது