in

தயாரிப்பாளர்களின் பணத்தை ஆட்டைய போட்டு நடிக்க மறுக்கும் தனுஷ்

தயாரிப்பாளர்களின் பணத்தை ஆட்டைய போட்டு நடிக்க மறுக்கும் தனுஷ்

 

நடிகர் தனுஷ் தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு நடிக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறார்.

காண்டான தயாரிப்பாளர் சங்கம் இவர் மீது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்திடம் புகார் அளித்துள்ளது. இதனை ஏற்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் தலைவர் ஆர் கே செல்வமணி இது சம்பந்தமாக விரைவில் விசாரிக்கப்படும்.

மேலும் ஏற்கனவே புது படங்கள் தொடங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகளோடு அனைத்து படப்பிடிப்புகளும் தொடங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்திடம் கேட்டுக் கொண்டு கொள்கிறோம்.

மேலும் சினிமாவில் பெண்களின் பாதுகாப்பு குறித்தும் ஒரு தனி குழு அமைக்க உள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் உடனடியாக அவர்களின் புகார் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பணியாற்றும் இடங்களில் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த விரைவில் விதிமுறைகள் அமைக்கப்படும், படப்பிடிப்பு தொடங்கும் பொழுது இந்த பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று ஆர் கே செல்வமணி கூறியுள்ளார்

What do you think?

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா மறைந்தார்

கட்சியில் இருந்து விரட்டப்பட்ட நடன இயக்குனர் ஜானி