in ,

மீண்டும் மோடி வருவார் என்று எனக்கு முன்பே தெரியும் திருச்சியில் தினகரன் பேட்டி


Watch – YouTube Click

மீண்டும் மோடி வருவார் என்று எனக்கு முன்பே தெரியும். திருச்சியில் தினகரன் பேட்டி.

திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகியின் இல்ல திருமண விழா திருச்சி திருவானைக்காவல் பகுதியில் நடந்தது இவ்விழாவிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகை தந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்..,

கருத்துக்கணிப்பில் மீண்டும் மோடி ஆட்சியமையும் என கூறப்படுகிறது.

3வது முறை மோடி ஆட்சிக்கு வருவார் என்பது அன்றே தெரியும்.

தமிழகத்தில் திமுக அதிக வெற்றி என்ற கருத்துக்கணிப்பு வந்துள்ளது. தமிழ்நாட்டில் மாற்றம் உண்டாகுமா என்ற கேள்விக்கு…

4ம்தேதி எல்லா நிலவரங்களும் தெரிந்து விடும். அதுக்கு பிறகு உண்மை என்ன என்று உங்களுக்கு தெரிந்து விடும்.

கருத்துக்கணிப்பின் படி அதிமுக எதிர்பார்த்த தொகுதியில் கிடைக்கவில்லை தலைமையில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு…!

தேர்தல் முடிந்தவுடன் அதைப் பற்றி பேசலாம் இந்த நேரத்தில் கருத்துக்களை பேச முடியாது.

அதிமுக உங்கள் கட்டுப்பாட்டில் வருமா என்ற கேள்விக்கு…

அம்மாவின் தொண்டர்களை எல்லாரையும் ஒருங்கிணைக்க வேண்டுவது தான் என்னுடைய நம்பிக்கை.

கடைசி கட்டமாக அரசியலில் ஆயுதமாக ஆன்மீகத்தை பயன்படுத்துகிறார்களா என்ற கேள்விக்கு.

நான் எல்லா கோயிலுக்கு செல்வேன். நான் கோவிலுக்கு செல்வது இயல்புதான் சமூக காலமாக அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை தற்போது கோவிலுக்கு சென்று வருகிறேன். மற்ற தலைவர்கள் கோவிலுக்கு செல்வது பற்றி பேசுவது மரியாதையாக இருக்காது.

ஓபிஎஸ் அணியில் கருத்து மாறுபாடு உள்ளது என்ற கேள்விக்கு..

நான்காம் தேதிக்கு பிறகு எல்லாம் சரியாகிவிடும் என தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

டி இமான் கச்சேரி தீயில் தொடங்கி சூறாவளிக்காற்றுடன் மழை தகர சீட்டுகள் பறந்ததால் ரசிகர்கள் ஓட்டம்

இந்தியா கூட்டணி பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு சர்வாதிகாரத்தின் உச்சம் துரை வைகோபேட்டி