in ,

திண்டிவனம் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத புஷ்ப விமானத்தில் அம்மன் வீதி உலா

திண்டிவனம் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத புஷ்ப விமானத்தில் அம்மன் வீதி உலா

 

திண்டிவனம் இலுப்பதோப்பு அருள்பாலித்து வரும் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத புஷ்ப விமானத்தில் அம்மன் வீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் இலுப்பதோப்பு ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கூழ்வார்த்தல் விழாவை முன்னிட்டு காலை அம்மனுக்கு அபிஷேகமும், அதனை தொடர்ந்து கரகம் வீதி உலாவும்,பின்னர் கோவில் கூழ் வார்த்தல் மற்றும் அன்னதானமும் நடைபெற்றது.

இரவு மூலவர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளிக்கவசத்துடன் முத்து மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டது.

புஷ்ப விமான வாகனத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் அமர்ந்தபடி வீதி பம்பை உடுக்கை நாதஸ்வரம், தவில் இசையுடன் உலா காட்சி நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

திண்டிவனம் அடுத்த நெடி திரவுபதி அம்மன் ஆலயத்தில் வசந்த பெருவிழா தீமிதி திருவிழா

திண்டிவனம் அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்