in

திருச்சியில் மாவட்ட எஸ்பியின் அகழி ஆபரேசன் -2

திருச்சியில் மாவட்ட எஸ்பியின் அகழி ஆபரேசன் -2

 

மாவட்ட எஸ்பியின் அகழி ஆபரேசன் -2 திருச்சியில் 16 ரவுடிகளிடமிருந்து பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் அரிவாள், கை துப்பாக்கி பறிமுதல்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சிராப்பள்ளி மாநகர ஆணையர், திருச்சிராப்பள்ளி மாவட்ட கால் கண்காணிப்பாளர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களின் உத்தரவின் பேரில் ‘ஆபரேசன் அகழி’ என்ற பெயரில் காவல் ஆய்வாளர்களின் தலைமையில் ஏற்கனவே 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்ற செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகப்படும் நபர்களின் முதல் பெயர் பட்டியல் (லிஸ்ட்) தயார் செய்து, அதிரடியாக கடந்த 10.09.2024-ஆம் தேதி அவர்களது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் 14 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 14 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 42 காவல் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டு, பல்வேறு ஆவனங்கள், கணக்கில் வராத பணம், நகைகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக ‘ஆபரேசன் அகழி’ 2-வது பெயர் பட்டியல் (லிஸ்ட்) நபர்களான 1) பால்ராஜ், 2) வியல் (எ)செல்வா குமார். 3) மபன் ராஜ் 4) ராமு. 5) நாகேந்திரன் (எ) பாம்புருட்டி நாகேந்திரன். 6) நவீன் குமார் 7) ராஜா. 8) பெரியசாமி (எ) கருவாடு பெரியசாமி. 9) ரமேஷ். 10) சன்னாசி (el) செந்தில் 11) ஆனந்த் 12) காத்தான் (எ) காத்தப்பிள்ளை, 13) கலா (எ) திலீப் குமார். 14) விசு (எ) விசுவநாதன், 15) முருகானந்தம் மற்றும் 16) மணிமாறன் ஆகியோர்களின் வியரங்களை சேகரித்து அதிரடியாக அவர்களது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் 16 காவல் ஆய்வாளர்கள் தலைமையில், 16 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 48 காவல் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

அவர்களிடமிருந்து 290 சொத்து ஆவணங்களும் 46 வங்கி கணக்கு புத்தகங்களும், புரோ நோட்டுகளும். 22 நிரப்பப்படாத சகாசோலைகளும், 05 செல்போன்களும் 13 சிம்கார்டுகளும், அரிவாள்,கைதுப்பாக்கி பிற ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. கட்டப்பஞ்சாயத்து மூலமாகவும் கந்து வட்டி தொழில் மூலமாகவும் மீரட்டி பெறப்பட்டவை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆபரேஷன் அவழி துவங்கும் போது ஒரு பெயர் பட்டியல்) தான் இருந்தது. 2-வது பெயர் பட்டியல் (லிஸ்ட் உள்ள 16 நபர்களை இன்று 4 07.10.2024) வீடு மற்றும் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது ஆப்ரேஷன் அகழி நடவடிக்கையால் கட்டப்பஞ்சாயத்து மற்றும் ரத்தில் ஈடுபடும் நபர்கள் மீது நிறைய மனுதாரர்கள் திருச்சிராப்பள்ளி, மாவட்ட காவல்துறை காண்அணுகியுள்ளனர் குறிப்பாக புதன்கிழமை குறை தீர்ப்பு முகாமில் பெற்ற மனுக்களின் தககயின் அடிப்படையில் 3 மற்றும் 4-வது பெட்ரி பட்டியல் (லிஸ்ட்) தயார் செய்யப்பட்டு சோதனைக்கான ஆயத்த பணிகளும் தற்போது நடைபெற்றுவருகிறது.

அடுத்த ஆபரேசன் அகழியி சோதனை விரைவில் நடைபெறும் என எஸ்.பி வருண்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

What do you think?

தமிழக அரசை கண்டித்து தஞ்சையில் அதிமுக சார்பில் நடந்த மனித சங்கிலி போராட்டம்

சிறந்த ஆவணப்படம்….விருது வென்ற சூர்யா ஜோதிகாவின் மகள் தியா