in

அண்ணாவின் கொள்கைகளை குழிதோண்டி திமுக புதைத்து வருகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

அண்ணா எதையெல்லாம் எதிர்த்தாரோ அதையெல்லாம் செயல்படுத்தி அண்ணாவின் கொள்கைகளை குழிதோண்டி திமுக புதைத்து வருகிறது

ஐ டி பூங்காவால் வரவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக காமராஜ் பல்கலைக்கழகத்திற்கு வழங்கினால் நிதி பற்றாக்குறை தீரும்

*தமிழகத்தில் கடுமையான வெப்ப கொதிநிலை போல் தற்போது துணை முதலமைச்சர் பதவியை யாருக்கு கொடுப்பது என்ற கொதிநிலை திமுகவில்
உள்ளது*

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி, கள்ளிக்குடி ஒன்றியத்தில் வளையங்குளத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் நிழல்குடை அமைக்கும் திட்டத்தினை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் தொடங்கி வைத்தார் இதனைத் தொடர்ந்து சின்ன உலகாணி கிராமத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் மகேந்திரன், முன்னாள் எம்எல்ஏ தமிழரசன், மாவட்ட பொருளாளர் திருப்பதி , எம்ஜிஆர் மன்ற மாநில துணை செயலாளர் புளியங்குளம் ராமகிருஷ்ணன் ,ஒன்றிய கழகச் செயலாளர் ராமையா, கண்ணன், பிரபுசங்கர், மற்றும் அன்னமுத்து, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது

கடந்த 10 நாட்களாக பருவ காற்று திசை மாறியதால் இன்றைக்கு மதுரையில் 105 டிகிரி வெயில் உள்ளதால் மக்கள் வேதனைப்பட்டு வருகிறார்கள், ஒருபுறம் பருவ திசை மாற்றத்தால் வெயில் கொடுமை ஒரு பக்கம் இருந்தாலும், மறுபுறம் நாட்டில் யார் துணை முதலமைச்சராக வரவேண்டும் என்று விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைக்கு வெயிலின் கொதிக்கலன் போல, திமுகவில் யார் துணை முதலமைச்சர் என்கிற கொதிக்கலன் விவாதம் நடைபெற்று வருகிறது.

மேலும் தமிழகத்தில் கொலைகள் நடைபெற நாட்களே இல்லை, சிவகங்கையில் கூட ஒரே நாளில் மூன்று கொலைகள் நடைபெற்று உள்ளது.

இன்றைக்கு உதயநிதியை மக்கள் பேசப்பட வைக்க வேண்டும் என்றும், தமிழகம் உதயநிதியை சுற்றுவது போல உருவாக்கி வருகிறார்கள். முதல் தடவை எம் எல் ஏ, அமைச்சர், துணை முதலமைச்சர் என்று சினிமா வருவதை போல உருவாக்க நினைக்கிறார்கள் ,இது ஜனநாயகத்தை அச்சப்படுத்துவது போல் உள்ளது.

75 ஆண்டு திமுக அரசியல் வரலாற்றில் 25 முறை தான் திமுக ஆட்சி செய்தது .அண்ணா ஆட்சி உருவாக்கிய தவிர்த்து மற்றவை எல்லாம் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி திமுக ஆட்சிக்கு வந்தனர்.

அண்ணாவின் கொள்கைகளை இன்றைக்கு திமுக குழி தோண்டி புதைத்து வருகிறது, அண்ணா வாரிசுக் கொள்கை எதிர்த்தார் ஆனால் அதை திமுக செயல் படுத்தி வருகிறது அண்ணா எதையெல்லாம் எதிர்த்தாரோ அதையெல்லாம் வழி நடத்தி திமுக செயல் படுத்தி வருகிறது.

உதயநிதி துணை முதலமைச்சர் ஆனால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு விடுமா? மின்சார கட்டணம் குறைந்து விடுமா? சொத்து வரி குறைந்து விடுமா, பால் விலைகுறைந்து விடுமா? பத்திர பதிவுகட்டணம் குறைந்து விடுமா?

இன்றைக்கு தமிழகம் கொலை, கொள்ளை நடைபெற்று வருகிறது போதை பொருள் கடத்தும் கேந்திர நிலையமாக தமிழகம் உள்ளது இதில் பதில் சொல்ல உதயநிதி முன்வருவாரா?

இன்றைக்கு காமராஜர் பல்கலைக்கழகம் நிதி பற்றாக்குறையால் தவித்து வருகிறது, தற்போது காமராஜ் பல்கலைகழகம் அருகே அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில் பூங்கா காமராஜர் பல்கலைக்கழக இடமாகும் அதற்குரிய நிதி தற்போது நிலுவையில் உள்ளது அதை கொடுத்தால் போதும் பல்கலைகழக நிதி பற்றாக்குறை போகும் இதையெல்லாம் நாங்கள் எடப்பாடியார் கவனத்தை எடுத்துச் செல்வோம்.

தற்பொழுது மழை பொய்து விட்டது இன்னும் இரண்டு நாள் மழை பெய்தால் தான் பயிர்கள் தப்பிக்க முடியும் இல்லையென்றால் பயிர்கள் கருகிவிடும் அப்படி கருகும் சூழ்நிலை ஏற்பட்டால் அரசு உரிய நிவாரணங்கள் வழங்க வேண்டும் என்று கூறினார்.

What do you think?

மதுரையில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் செய்தியாளர்களிடம் கோபப்பட்ட நடிகர் புகழ்

புதுவை தலைமை செயலகம் அருகே நடைபாதையில் இருந்த பிரபல காபி கடையை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்