in ,

திமுக செயலாளர் எம்.எஸ்.தரணி வேந்தனுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது


Watch – YouTube Click

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த திமுக செயலாளர் எம்.எஸ்.தரணி வேந்தனுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது

 

வந்தவாசிக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தரணி வேந்தனுக்கு உற்சாக வரவேற்பு சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் வீர வெள்ளிவள் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை சேர்ந்த வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ்.தரணி வேந்தன் நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார்.

இதைத்தொடர்ந்து வந்தவாசிக்கு வந்த அவருக்கு வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் தலைமையில் தொகுதி திமுக சார்பில். பேரறிஞர் அண்ணா
சிலையருகில் உற்சாக வரவேற்பளிக் கப்பட்டது.

பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அவருக்கு தொகுதி திமுக சார்பில் வீர வெள்ளி வாள் பரிசளிக்கப்பட்டது. தொடர்ந்து அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பின் பழைய பேருந்து நிலையம், பஜார் வீதி, தேரடி, புதிய பேருந்து நிலைய அணுகு சாலை ஆகிய பகுதிகள் வழியாக திறந்த காரில் சென்றவாறு நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.சீதா பதி, நகர செயலாளர் தயாளன், நகர்மன்ற தலைவர் எச்.ஜலால், ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், சுந்தரேசன், பழனி, ராதா , படூர் வெங்கிடேசன், நகர அவைத்தலைவர் நவாப்ஜான், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப் பாளர்கள் மதன் குமார், கிஷோர் குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் கே.நாகூர்மீரான், அன்பரசு, மாவட்ட பிரதிநிதிகள் குடியரசு, சி.பி.பாபு, கிளைச் செயலாளர் குட்டி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

குற்றால அருவிகளில் வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீர் வரத்து குறைவு

காவல்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி