in

வன்னியர் இட ஒதுக்கட்டை தர மறுத்தால் மாநிலம் தழுவிய போராட்டம் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு


Watch – YouTube Click

வன்னியர் இட ஒதுக்கட்டை தர மறுத்தால் மாநிலம் தழுவிய போராட்டம் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் டாக்டர் ராமதாஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்பொழுது,
வன்னியர்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கி இருக்கின்றார்கள். இந்நிலையில் வன்னியர்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த திமுக தற்போது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தர மறுக்கின்றது.

நான் சாதாரண மருத்துவராக இருந்த போது தமிழகம் முழுவதும் மக்களை திரட்டி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி இருக்கின்றேன். தற்பொழுது பாமக வலிமையான ஒரு கட்டமைப்போடு உள்ளது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க மறுத்தால் நாடு தழுவிய போராட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறும் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்..

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு சம்பவத்தில் சட்டமன்றத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து வருகின்றனர் குறிப்பாக அமைச்சர் சிவசங்கர் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கைகளில் தவறான கருத்துக்களை கூறி வருகின்றார் என்று கூறினார். மேலும் அவர் பேசும்போது, இனிமேல் இது போன்று தவறுகள் நடைபெறாமல் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க வேண்டும். மாறாக தமிழக முதல் வரும் ,அமைச்சரும் இந்த சம்பவத்தில் அவையை தவறாக திசை திருப்பி வருகின்றனர்.

இதனால் இருவர் மீதும் பாமக சார்பில் உரிமை மீறல் பாச்சனை எழுப்ப உள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் திமுகவினர் தொடர்பில் இருப்பதாலும், மெத்தனால் பயன்படுத்தும் சம்பவம் சில மாநிலங்கள் சம்மந்தப்பட்டிருப்ப
தாலும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

மேலும் அவர், தமிழகம் முழுவதும் மது சம்மந்தமான பிரச்சனைகளுக்கு முழு காரணம் திமுக. தான் காரணம்.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆட்சியில் மது சம்மந்தமாக ஒரு தலைமுறையே அறியாமல் இருந்த நிலையில் மீண்டும் மதுவை திமுகவினர் தான் கொண்டு வந்தனர். மதுவினால் நாட்டில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. நாட்டிலயே தமிழகத்தில்தான் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர். இவற்றைப் போக்க தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமுல் படுத்த வேண்டும் என்றார். மேலும் அவர், வரும் காலங்களில சட்டசபை 100 நாட்ககள் நடத்தப்படுவதோடு, நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

தனது மகனை காணவில்லை என கூறி சிறுவனின் தாயார் பிரியா கீழவளவு காவல் நிலையத்தில் புகார்

புதுவையின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (27.06.2024) | இன்றைய முக்கிய செய்திகள்