in

முதலமைச்சர் ரங்கசாமியின் நிர்வாக சீர்கேட்டாலே புதுச்சேரியில் ரவுடிசம் தலை தூக்கி உள்ளது

முதலமைச்சர் ரங்கசாமியின் நிர்வாக சீர்கேட்டாலே புதுச்சேரியில் ரவுடிசம் தலை தூக்கி உள்ளது

 

முதலமைச்சர் ரங்கசாமியின் நிர்வாக சீர்கேட்டாலே புதுச்சேரியில் ரவுடிசம் தலை தூக்கி உள்ளதாக அதிமுக மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் குற்றம் சாட்டியுள்ளார்.

தான் செய்யும் தவறை மறைப்பதற்காகவே அதிகாரிகளின் தவறுகளை ரங்கசாமி கண்டு கொள்வதில்லை என விமர்சனம்

அதிமுகவின் 53 -ம் ஆண்டு தொடக்க விழா புதுச்சேரி அதிமுக மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

இதனை ஒட்டி முத்தியால்பேட்டை மணி கூண்டு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா, எம்.ஜி.ஆர், மற்றும் ஜெயலலிதாவின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வையாபுரி மணிகண்டன்…

புதுச்சேரியில் ரங்கசாமி எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்குளைகிறது. ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டுகிறார்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்கிறார்கள் ஆனால் இதை எல்லாம் கண்டிக்க வேண்டிய முதலமைச்சர் வாய் மூடி மௌனமாக இருக்கிறார்.

தாம் செய்யும் தவறை மறைப்பதற்காக அதிகாரிகள் செய்யும் தவரை அவர் தட்டி கேட்பதில்லை குறிப்பாக காவல்துறையில் அதிகாரிகளை கண்டு கொள்வதே இல்லை.

ரங்கசாமியின் நிர்வாக சீர் கேட்டால் புதுச்சேரியில் தற்போது ரவுடிசம் தலைதூக்கி உள்ளது என்று குற்றம் சாட்டிய அவர் ரவுடியிசத்தை கட்டுப்படுத்த வேண்டிய முதலமைச்சரும் உள்துறை அமைச்சரும் காரில் வலம் வந்தும், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.

What do you think?

ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோவிலில் ஸ்ரீ நிகமாந்த தேசிகன் உத்சவம்

செஞ்சி ஸ்ரீ சுந்தரவிநாயகர் ஆலயத்தில் நவராத்திரி திருவிளக்கு பூஜை திருவிழா