in

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 24-10-2024

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 24-10-2024

இளவரசர் ஹாரி மேகன் மார்க்கலுடனான தனது திருமணத்திலிருந்து வெளியேற வழி தேடுவதாக கூறப்படுகிறது, ஏனெனில் அவர்கள் இருவரும் தனித்தனியாக வாழ்வதாக வதந்திகள் பரவுகிறது. இந்த செய்தியை ஊடகத்தில் வெளிஇட்டவர் ரிச்சர்ட் என்ற பத்திரிகையாளர் இவர் ஒரு காலத்தில் ராஜ குடும்ப செய்தியாளராக இருந்தவர் . மேலும் நான்கு நாள் பயணனமாக தென்னாப்பிரிக்காவின் அண்டை நாடான லெசோதோ மற்றும் ஜோகன்னஸ்பர்க் நகரங்களுக்கு இளவரசர் ஹாரி விஜயம் செய்த போதும் தனியாக தான் வந்தார் . நியூயார்க் மற்றும் வெல்சில்ட் விருதுக்காக லண்டனுக்கு சென்ற போதும் மேகன் இல்லாமல் தனியாகப் பயணம் செய்தார் என்பது குறிப்பிடதக்கது

விம்பிள்டனில் உள்ள பள்ளி ஒன்றில் கார் மோதியதில் எட்டு வயது சிறுமிகள் இருவர் மரித்த சம்பவம் தொடர்பான விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி, தென்மேற்கு லண்டனில் உள்ள கேம்ப் ரோட்டில் உள்ள தி ஸ்டடி ப்ரெப் பள்ளியில் லேண்ட் ரோவர் வேலியை உடைத்து ஒரு கட்டிடத்தில் மோதியதில் நூரியா சஜ்ஜாத் மற்றும் செலினா லாவ் சம்பவ இடத்திலேயே மறைந்தனர்.

கால்பந்து ஆளுகை மசோதா வியாழன் அன்று ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இங்கிலாந்தில் உள்ள விளையாட்டின் நிதி நிலைத்தன்மையை எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த மசோதா, சுயேட்சையான கால்பந்து கட்டுப்பாட்டாளர் (IFR) கிளப்கள் முறையாக செயல்படுவதற்கு போதுமான பணம் உள்ளதா என்பதைச் சரிபார்த்து, அவ்வாறு இல்லை என்று கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்க முடியும். கிளப்புகளுடன் இணைந்து பிரச்சனைகளைச் சரிசெய்ய முயற்சிக்கும், மேலும் தேவைப்பட்டால் கடுமையான தடைகளை வழங்குவதற்கான சட்டமும் இந்த மசோதா ..வில் உள்ளது

லெபனான் அரச ஊடகம் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் 17 இஸ்ரேலிய தாக்குதல்களை நடத்தியதாகவும், ஆறு கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டதாகவும், ஈரான்-ஹெஸ்பொல்லா போர் ஒரு மாத கால அளவை எட்டிய நிலையில், புதன்கிழமை (அக் 23) ஈரான் சார்பு ஒளிபரப்பாளரின் அலுவலகங்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்தது. ஹெஸ்பொல்லாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு இஸ்ரேலிய இராணுவம் வெளியேற்ற எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, இதன் விளைவாக தெற்கு புறநகர்ப் பகுதிகளில் ஒரு பெரிய குண்டுவெடிப்பு.நிகழ்தது

What do you think?

மாநகராட்சிக்கு வரி பாக்கி வைத்துள்ளவர்கள் குறித்த விபரங்களை அறிக்கையாக வெளியீட வேண்டும்” என துணை மேயர் நாகராஜன் பேட்டி,

திருத்துறைப்பூண்டியில் உலக போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி