in

காரையே மேடையாக்கி காரின் மேல் ஏறி பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்


Watch – YouTube Click

காரையே மேடையாக்கி காரின் மேல் ஏறி பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

 

நாகையில் அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு மேடை போட அனுமதிக்காத காவல்துறையினர்; காரையே மேடையாக்கி காரின் மேல் ஏறி பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியாக்கி உள்ளது.

மேலும் விஷ சாரயம் குடித்தவர்களில் பல பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தாத திமுக அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக கோரியும் தமிழக முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நாகை அவுரித்திடலில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் அதிமுகவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுகவினர் மேடை அமைத்த போது துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் அதற்கு அனுமதி அளிக்காமல் தடுத்து நிறுத்தினார்.

மேலும் மேடை அமைக்க எடுத்து வந்த பொருட்களையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். மேலும் தமிழக அரசிற்கு எதிரான கண்டன முழக்க வாசகங்கள் அடங்கிய பதாகைகளை காவல்துறையினர் பிடிங்கி அப்புறப்படுத்த முயன்றால் நகர செயலாளர் தங்க.கதிரவன் உள்ளிட்ட அதிமுகவினர் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

பதாகைகளை போலீசாரும், அதிமுகவினரும் மாறி மாறி பிடிங்கியதால் இருத்தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது ஒரு புறம் நடந்துக் கொண்டிருக்க முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனது காரை நிறுத்தி அதையே மேடையாக்கி காரின் மேல் ஏறி நின்றுக் கொண்டு தமிழக அரசை கண்டித்து பேசினார்.

அப்போது பேசிய அவர் நாகை மாவட்டத்தில் சாராய வியாபாரிக்கு ஆதரவாக அதிமுக செயல்பட்டதாக நிருபித்தால் இங்கேயே தீக்குளித்து சாவதற்கு தயாராக இருப்பதாக ஆவேமானார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000 த்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர். நாகையில் அதிமுக ஆர்ப்பாட்டத்திற் மேடை அமைக்க போலீசார் அனுமதிக்காத நிலையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனது காரையே மேடையாக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டது பரப்பரப்பு ஏற்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

குணச்சித்திர நடிகர் இளவரசு..வின் மகன் Reception..னுக்கு வந்த பிரபலங்கள்

இரண்டு வாரங்களாக கோடம்பாக்கத்தையே கதி கலக்கி வரும் ஒரு நியூஸ்