in ,

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு இருவர் படுகாயம்.

சிவகாசி அருகே உள்ள காளையார் குறிச்சி பகுதியில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

பத்துக்கு மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பட்டாசு ஆலைகளுக்கான மூலப்பொருள்கள் கலக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்ட போது மூலப்பொருளில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்தில் மாரியப்பன் முத்து முருகன் என்ற இரண்டு தொழிலாளி உயிரிழந்துள்ளனர்.

மேலும் இரண்டு தொழிலாளர்கள் காயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

நாமக்கல் மோகனுார் பெருமாள் ஆலயத்தில் ஆனிமாத பிரம்மோட்ஷச தேர்திருவிழா – 5-ம் நாள் ஷேசவாகனத்தில் திருவீதி உலா

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை….