in

ஊசி போட்டதால் வாலிபர் இறந்ததாக புகார் போலி டாக்டர் கைது

ஊசி போட்டதால் வாலிபர் இறந்ததாக புகார் போலி டாக்டர் கைது

 

சிதம்பரத்தில் ஊசி போட்டதால் வாலிபர் இறந்ததாக புகார். போலி டாக்டரை கைது செய்த போலீசார். வழக்குப் பதிந்து விசாரணை

சிதம்பரம் அருகே உள்ள மேலதிருக்கழிப்பாலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவன். இவரது மகன் கவிமணி(22). இவர் உடல் நலக்குறைவு காரணமாக சிதம்பரம் நகரில் உள்ள மந்தகரை பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு மருத்துவம் படிக்காமல் வைத்தியம் பார்த்து வந்த சரவணன் என்கிற தளபதி ராஜா (50) என்பவரிடம் காண்பித்துள்ளார். அப்போது சரவணன் என்கிற தளபதிராஜா கவிமணிக்கு ஊசி போட்டு மாத்திரை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டிற்கு சென்ற கவிமணி திடீரென வழியிலேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவருடன் வந்தவர்கள் கவிமணியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கவிமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் கவிமணியின் தாயார் கவிதா இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலி டாக்டரான சரவணன் என்ற தளபதி ராஜாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டபோது பிடிபட்டார்

தமிழக முழுவதும் மாவட்ட கருவூலக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை