அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சண்டையா என்று ரசிகர்கள் கேள்வி
எல்லோரும் எப்படி சம்பாதிக்கணும்…சம்பாதித்த பணத்தை எப்படி பாதுகாப்பது என்று யோசிப்பார்கள்.
ஆனால் புகழின் உச்சியில் இருக்கும் போதே சம்பாதிக்கும் வழியை விட்டுவிட்டு சம்பாதித்த பணத்தை செலவு செய்கிறார் நடிகர் விஜய் என்று பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அரசியலில் ஈடுபட்டு வருகிறார். விஜய் அண்மையில் நடைபெற்ற கட்சியின் முதல் கூட்டத்தில் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
எப்படியும் சிஎம் சீட்டில் உட்கார்ந்து விட வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறார் நடிகர் விஜய்.
நடிகர் விஜய் தனிக்காட்டு ராஜாவாக வலம் வருகிறார் ஆனால் ஒரு காலத்தில் விஜய்யை தூக்கி நிறுத்தியவரே அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு டி வி கே கட்சியின் முதல் மாநாட்டிற்கு தனது பெற்றோர்களை சமரசம் செய்த அழைத்து வந்தவர்.
TVK கட்சியின் முதல் பொதுக்கூட்டத்திலும் தனது பெற்றோர்களை அழைத்து வந்தார் தற்பொழுது அவரின் தந்தை கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
அதாவது விஜய்யின் பெயரை வைத்து புஸ்ஸி ஆனந்த் சம்பாதித்து வருகிறார். பலர் என்னிடம் அது பற்றி கூறியிருக்கின்றனர் நானும் விஜய்யிடம் அவர் பற்றி கூறியிருக்கிறேன் ஆனால் கேட்கவில்லை அவர் அதிகமாக நம்புகிறார்.
நான் விரைவில் புது கட்சி ஆரம்பிக்க போகிறேன் என்று கூறியிருக்கிறார் திரும்பவும் அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சண்டையா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.