in

விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுவன் மேல் பற்றி எறிந்த நெருப்பு


Watch – YouTube Click

விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுவன் மேல் பற்றி எறிந்த நெருப்பு

கள்ளக்குறிச்சி சம்பவம் நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் சமயத்தில் தன் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று விஜய் பாதிக்கப்பட்டகுடும்பங்களை நேரில் சந்தித்த ஆறுதல் கூறிய போது தனது தனது ரசிகர்களுக்கு கட்டளையிட்டார்.

நடிகர் விஜய்யின் ஐம்பதாவது பிறந்த நாள் இன்று விஜய்யின் பிறந்தநாள் எப்போதுமே கோலங்கலமாக நடக்கும் ஆனால் கள்ளக்குறிச்சி சம்பவத்தின் காரணமாக விஜய்..யின் பிறந்த நாள் இன்று கலை கட்டவில்லை. ஆனாலும் தளபதியின் பிறந்த நாளை ஒரு சில இடங்களில் அவரது ரசிகர்கள் மாசாக கொண்டாடி வருகிறார்கள் . நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டருகில் ஈசிஆர் சரவணன் சார்பில் நடத்தப்பட்ட விஜயின் பிறந்தநாள் விழாவில் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர். நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஜய் ரசிகர் மன்றம் சிலநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். சிறுவர் ஒருவர்சாகசம் செய்ய கையில் பெட்ரோலை ஊற்றி ஓடுகளை உடைத்தார் .ஆனால் கையில் பற்றிஇருந்த நெருப்பு அணையாமல் இருக்க அலறிஅடித்து நெருப்பை தட்டி விடும் பொழுது அருகில் கையில் பெட்ரோல் வைத்திருந்தவர் மேல் அந்த நெருப்புப்பட்டு அவர்மேலும் தீ எரிய ஆரம்பித்தது .பதறிய கூட்டதினர் இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஜய் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று கூறிய பொழுதும் ரசிகர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சிறுவனுக்கு தீ விபத்து ஏற்பட்டது பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Watch – YouTube Click

What do you think?

எதிர்நீச்சல் சீரியல் அவசரமாக முடிய இது தான் காரணம் … பாம்பே ஜானம் பேட்டி

உழைக்க வேண்டாம்? குடிகாரனாக இருந்தால் போதுமா? நடிகை கஸ்தூரி கேள்வி