தஞ்சையில் தீத்தொண்டு வாரம் தீயணைப்பு துறையினரால் அனுசரிக்கப்பட்டது
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீத்துண்டு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் இந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் நாளான இன்று தஞ்சாவூர் தீயணைப்பு அலுவலகத்தில் தீயணைப்பின் போது உயிரிழந்த வீரர்களுக்கு மலர் வளையம் செலுத்தி மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
தீயணைப்பின் போது உயிரிழந்த 34 வீரர்களின் பெயர்கள் கூறப்பட்டு அவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் S. குமார் அவர்கள் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் நா.கணேசன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.