in

ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழை புதுச்சேரி யானாம் பிராந்தியத்திற்கு வெள்ள நீர் அபாய எச்சரிக்கை

ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழை.புதுச்சேரி யானாம் பிராந்தியத்திற்கு வெள்ள நீர் அபாய எச்சரிக்கை.பாதுகாப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்.

புதுச்சேரியில் யானாம் பிராந்தியம் ஆந்திர மாநில காக்கிநாடா அருகே உள்ளது. தற்பொழுது ஆந்திர பகுதியில் தொடர் கன மழை பெய்து வருவதன் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வரத் துவங்கியுள்ளன.

இதில் பத்ராச்சலம் அணையின் நீர் மட்டம் 36 அடியாக உயர்ந்துள்ளது.

இந்த அணை 43 அடியை எட்டும் போது முதல் எச்சரிக்கை விடப்படும். இருப்பினும் முன் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியின் யானாம் பிராந்திய மண்டல நிர்வாகி முனுசாமி தலைமையில் அனைத்து துறையினரும் பாதுகாப்பு முன்னெச்சரிகை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

தாழ்வான பகுதிகளான பிரான்சிபா, பால யோகி நகர், பழைய ராஜுவ் நகர், குருசம் பேட்டை, குரு கிருஷ்ணாபுரம் மற்றும் கடலோர கிராமங்களில் வெள்ள நீர் அளவை கணக்கிட்டு வருகின்றனர்.சில பகுதிகளில் தற்போது வெள்ளநீர் வரத் துவங்கி விட்டன.கனமழை நீடிக்கும் பட்சத்தில் யானாம் பகுதியில் வெள்ள நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது.

ஆனால் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்படவில்லை. அதேபோல் இந்த ஆண்டும் அனைத்து துறைகளும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

போதிய அளவிலான மணல் மூட்டைகளை பொதுப்பணித்துறை தயார் நிலையில் வைத்துள்ளது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று உணவு வழங்க குடிமைபொருள் வழங்கு துறையும் வருவாய் துறையும் தயார் நிலையில் உள்ளன. மழைக்கால நோயிலிருந்து மக்களை பாதுகாக்க சுகாதார துறையும் மரங்கள் விழுந்தாலும் மழையில் மக்கள் சிக்கினால் அவர்களை மீட்க தீயணைப்புத் துறையும் தயார் நிலையில் உள்ளதாக மண்டல நிர்வாக அதிகாரி முனுசாமி தெரிவித்துள்ளார். தற்பொழுது உள்ள சூழ்நிலையில் யானாம் பாதுகாப்பாக இருப்பதாகவும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பேட்டி…முனுசாமி…மண்டல நிர்வாக அதிகாரி… யானாம்.

What do you think?

நாகை அருகே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தாய், மகளுக்கு நீதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு 300 க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்

புதுச்சேரி அரசை மோடி அரசாங்கம் புறக்கணிப்பதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்