in

அண்ணாமலையார் திருக்கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம்

அண்ணாமலையார் திருக்கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம் முடித்து தங்கள் ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்….

விழுப்புரம்- திருப்பதி பயணிகள் ரயில் திருவண்ணாமலை வந்தடைந்ததும் ஒருவருக்கொருவர் தள்ளிக் கொண்டும் முண்டியடித்துக் கொண்டும் ரயிலில் ஏறியதால் பரபரப்பு….

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களிலும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவம் விழா, ஆனி மாதத்தில் ஆனி பிரம்மோற்சவ விழா, ஆடி பிரம்மோற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, தை மாதத்தில் உத்தராயன புண்ணிய காலம் என ஆண்டுதோறும் பல்வேறு பிரம்மோற்சவங்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் விமர்சையாக நடைபெறும்.

திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாத பௌர்ணமிக்கும் பல்வேறு மாவட்ட மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை புரட்டாசி மாத பௌர்ணமி 11:27 மணிக்கு தொடங்கி இன்று காலை 09:10 மணிக்கு நிறைவு அடைய உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

புரட்டாசி மாதம் பௌர்ணமி கிரிவலத்திற்காக பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து நேற்று கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை முதல் இரவு விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் சிறப்பு ரயில்களும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இயக்கப்பட்டது.

இந்நிலையில் விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல ஏதுவாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் விடியற்காலை முதல் குவிந்தனர். ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மக்கள் தலையாகவே இருந்த நிலையில் விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயில் திருவண்ணாமலை வந்தடைந்தது.

திருவண்ணாமலை வந்தடைந்த ரயிலில் பௌர்ணமி கிரிவலம் முடித்து ரயில் நிலையத்தில் காத்திருந்த ஏராளமான பயணிகள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டும், முண்டியடித்து கொண்டும் ஏறிச் சென்றதால் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

ரயில் புறப்பட்டு சென்றும் ஏராளமான பக்தர்கள் அடுத்து வரும் ரயிலுக்காக காத்திருக்கும் சூழலும் அந்த நிலவியது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் கூடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பும் நிலவியது.

What do you think?

அடுத்த சீசனில் பங்கேற்க மாட்டேன்….. மணிமேகலையை தொடர்ந்து வெளியேறும் செஃப் தாமு

கிரிவலத்திற்கு வந்த பக்தர்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கவில்லை பக்தர்கள் திடீர் சாலை மறியல்