in ,

திருப்பதி மலையில் பௌர்ணமி கருட வாகன புறப்பாடு

திருப்பதி மலையில் பௌர்ணமி கருட வாகன புறப்பாடு

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு.

பௌர்ணமி தினம் அன்று ஒவ்வொரு மாதமும் திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருடபாகன புறப்பாடு நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் பௌர்ணமி தினமான இன்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.

கருட வாகன புறப்பாட்டை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சாமி சர்வ ஆபரண அலங்காரம் பூண்டு கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார்.

அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கிடையே நான்கு மாட வீதிகளில் கருட வாகன புறப்பாடு கண்ட உற்சவர் மலையப்ப சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாட்டை கண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

What do you think?

திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌர்ணமி முடித்து ஊர் திரும்பும் பக்தர்கள்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா ஜொலிக்கும் பேராலயம்