in ,

திருப்பதி மலையில் கருட பஞ்சமி வருட வாகன புறப்பாடு

திருப்பதி மலையில் கருட பஞ்சமி வருட வாகன புறப்பாடு

கருட பஞ்சமி தினமான இன்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

ஆண்டுக்கு ஒரு முறை பிரம்மோற்சவ சமயத்திலும், ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்றும் திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெறும்.

அத்துடன் கூடுதலாக கருட பஞ்சமி தினம் அன்றும் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் கருட பஞ்சமி தினமான இன்று இரவு திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

அப்போது மாட வீதியில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாட்டை கண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

What do you think?

திருப்பதி மைதானத்தில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய காக்டைல் மது

நிஜாமாபாத் நகராட்சி கண்காணிப்பாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை