திருப்பதி ஏழுமலையான் மலையில் கருட வாகன புறப்பாடு
கருட வாகன புறப்பாடு.
பௌர்ணமி தினமான இன்று திருமலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.
பௌர்ணமி நாட்களில் திருப்பதி மலையில் கருட வாகன புறப்பாடு நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் பௌர்ணமி தினமான இன்று திருமலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.
கருட வாகன புறப்பாட்டை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார்.
அங்கு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமிக்கு தூப தீப நைவேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.
அப்போது நான்கு மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி மேற்கொண்டனர்.