in

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் ஒரு கோடி 53 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் ஒரு கோடி 53 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

 

கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்பொழுது பெண் பயணி ஒருவரிடம் இருந்து ஏராளமான 22 மற்றும் 24 கேரட் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. எவ்வித ஆவணமும் இன்றி சுங்க வரி செலுத்தாமலும் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது.

அவரிடம் இருந்து 2291 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். ரூபாய் ஒரு கோடி 53 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

What do you think?

கல்லூரி மாணவ மாணவியர்கள் கூடுதல் பேருந்து இயக்க கோரி சாலை மறியலில்

தேசியக்கொடி வண்ணத்தில் மின்னொளியில் ஜொலிக்கும் திருச்சி என்.ஐ.டி …