in

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிறந்த நாளை முன்னிட்டு தங்க தேர் இழுத்து வழிபாடு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிறந்த நாளை முன்னிட்டு தங்க தேர் இழுத்து வழிபாடு

 

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தங்க தேர் இழுத்து வழிபாடு மேற்கொண்டார்…

அதிமுக முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜி தனது பிறந்த நாளை அதிமுக தொண்டர்களுடன் உற்சாகமாக கொண்டாடினார்.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி தனது பிறந்த நாளை முன்னிட்டு பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு மேற்கொண்டார்.

முன்னதாக கோயிலுக்கு வந்த அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்பு பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கிய ராஜேந்திர பாலாஜி ஆண்டாள் கோயில் யானை ஜெயமாலியதாவிற்கு பழ வகைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்…

What do you think?

 நடிகர் ஆதியின் தந்தை 75 வயது பூர்த்தி விஜயரத சாந்தி விழா

செம்பட்டி அருகே, சூறாவளி காற்றுக்கு வாழை மரங்கள் சாய்ந்து சேதம் விவசாயிகள் கவலை