in ,

நாமக்கல் நகர் சாய்பாபா ஆலயத்தில் குருபூர்ணிமா சிறப்பு வழிபாடு

நாமக்கல் நகர் சாய்பா ஆலயத்தில் குருபூர்ணிமா சிறப்பு வழிபாடு

நாமக்கல் – திருச்சி சாலை, இந்திரா நகரில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய் தத்தா பிருந்தாவன் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு ஸ்ரீ ஷீரடி சாய் தத்தா பிருந்தாவன் சாய்பாபா கோவிலில் ஆடி மாதம் குருபூர்ணிமாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோபுர தீபம் உட்பட பல்வேறு தீப உபசரிப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில் சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலையில் சாய்பாபாவுக்கு ஆரத்தி, கலச பூஜை, சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் ஆரத்தி தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பக்தி நடன நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கோவிலில் பக்தர்கள் தியானம் செய்ய தனி அறை அமைக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

What do you think?

நாமக்கல் எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் 28 ஆலயத்தில் ஜெயதுர்கா ஹோமம்

நாமக்கல் காளியம்மன் ஆலயத்தில் 23-ம் ஆண்டு ஆடி பெளர்ணமி பால் குட ஊர்வலம்