in

குருவித்துறை குரு ஸ்தலம் சித்திர ரத வல்லவப் பெருமாள் திருக்கல்யாண உற்சவ வைபோகம்

குருவித்துறை குரு ஸ்தலம் சித்திர ரத வல்லவப் பெருமாள் திருக்கல்யாண உற்சவ வைபோகம்

 

குருவித்துறை குரு ஸ்தலம் அருள்மிகு ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி சமேத சித்திர ரத வல்லவப் பெருமாள் திருக்கல்யாண உற்சவ வைபோகம் சிறப்பாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா குருவித்துறை கிராமத்தில் அருள் புரியும் அருள்மிகு ஶ்ரீ சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோவில் குருவித்துறை ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி சமதே சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கல்யாண உற்சவ வைபோகம் சிறப்பாக நடைபெற்றது

திருக்கல்யாண வைபவத்தின் போது மங்கள இசை, வேத பாராயணம் முழங்க பெருமாள் மற்றும் தாயாருக்கு மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் , திருக்கல்யாண நிகழ்ச்சியும் பக்தர்கள் முன்னிலையில், சிறப்பாக நடைபெற்றது விழா ஏற்பாடு கோவில் நிர்வாக அதிகாரி & பணியாளர்கள் செய்திருந்தனர்.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு ஶ்ரீ சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோவில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றதால் பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

திருக்கல்யாண வைபோகத்தின் போது பக்தர்களின் திருமண தடை, தொழிலில் முன்னேற்றம், போன்ற தோஷங்கள் பிரச்சனைகள் தீர பக்தர்களின் ஜாதகங்களைக் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். அது சமயம் திருக்கோவிலில் அன்னதானம் நடைபெற்றது, பக்தர்கள் திருக்கல்யாணத்திற்கு மொய் எழுதி விட்டு திருமண பிரசாத பை பெற்று சென்றனர்.

திருக்கல்யாணத்தை ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி சமதே சித்திர ரத வல்லப பெருமாள் ஆசி பெற்றனர்.

What do you think?

சிதம்பரத்தில் தேரோடும் வீதிகளில் உறியடி திருவிழா

டி.குரும்பப்பட்டியில் முத்தாலம்மன் கோவில் 70 அடி உயரம் உள்ள வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி