in

மயிலாடுதுறை மாவட்டம் பகுதிகளில் கடும் பனிமூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் பகுதிகளில் கடும் பனிமூட்டம்

 

மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம். வாகன ஓட்டிகள், அவதி பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி,கொள்ளிடம், தரங்கம்பாடி சுற்று வட்டார பகுதியில் அதிகாலை முதல் கடும் பனி மூட்டம் நிலவியது.கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் குறைந்து மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று அதிகாலை முதல் 8 மணிக்கு மேலும் பனியின் தாக்கம் குறையாமல் இருந்ததால் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வர முடியாத வீட்டில் முடங்கியுள்ளனர்.

காலையில் நடை பயிற்சி செய்பவர்கள் முதல் மற்றும் வாகன ஓட்டிகள் வரை மெதுவாகவே சென்றனர்.சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிபொழிவு நிலவியதால் வாகனங்களில் முகப்பு விளக்கு எரிய விட்டு ஊர்ந்து செல்கின்றன.

What do you think?

90 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற சீர்காழி நகர வர்த்தக சங்க தலைவர் தேர்தல்

மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் ஆலய தை கடை வெள்ளி பால்குட அபிஷேக அன்னதான விழா