in

குதிரைகளால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி


Watch – YouTube Click

குதிரைகளால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி

 

குதிரைகளால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதி நடவடிக்கை எடுக்காத துறை சார்ந்த அதிகாரிகள்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வள்ளலாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தங்குடி கிராமத்தில் மயிலாடுதுறை வழியாக சீர்காழி செல்லும் சாலையில் ஏராளமான குதிரைகள் சாலையை மரித்து போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகும் நிலையில் உள்ளது.

அப்பகுதியில் வாழும் பொதுமக்களும் குதிரை தாக்கி விடுமோ என்று நடந்து செல்வதற்கே அச்சமடைகின்றனர்.

இந்த சாலை வழியாக தினமும் அரசு வாகனங்களும் அதிகாரி வாகனங்களும் சென்றாலும் யாரும் இதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை என்று அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

அதன் துறை சார்ந்த அதிகாரியிடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

திருவாரூர் அருகே திமுக ஒன்றிய பெருந்தலைவரை துப்பாக்கியால் தாக்குதல்

குடியிருப்பு பகுதியில் புகுந்த 6 அடி நீள பாம்பால் மக்கள் பீதி…