in ,

இல்ல தெய்வங்கள் ஸ்ரீ சிவன் ஸ்ரீ பார்வதி தாயார் திருக்கல்யாண மகோற்சவம்

இல்ல தெய்வங்கள் ஸ்ரீ சிவன் ஸ்ரீ பார்வதி தாயார் திருக்கல்யாண மகோற்சவம்

 

திண்டிவனம் அடுத்த தணியல் கிராமம் திரு கண்ணப்ப குருக்கள் இல்ல தெய்வங்கள் ஸ்ரீ சிவன் ஸ்ரீ பார்வதி தாயார் திருக்கல்யாண மகோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தணியல் கிராமத்தில் உலக மக்கள் நன்மை வேண்டியும் வருகின்ற வடகிழக்கு பருவ மழை மக்களை பாதிக்காமல் இருக்க வேண்டிய கண்ணப்ப குருக்கள் இல்ல தெய்வங்கள் ஸ்ரீ சிவன் ஸ்ரீ பார்வதி தாயார் திருக்கல்யாண விழாவை திருக்கல்யாண முன்னதாக மங்கல தாம்பூல சீர்வரிசை பொருட்கள் பக்தர்களால் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துவரப்பட்டன.

தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சிவபெருமான் மணமகன் கோலத்தில் ஸ்ரீ பார்வதி தாயார் மணமகள் கோலத்தில் காட்சியளித்தனர். இதனைத் தொடர்ந்து தொடர்ந்து கலசை பூஜையும் காப்பு கட்டும் வைபவம், பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியும் மங்கள நான் அணிவிக்கும் வைபவம் மற்றும் மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

மணக்கோலத்தில் உள்ள தெய்வங்களுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் உட்பிரகாரம் மலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தனியால் கண்ணப்ப குருக்கள் குடும்பத்தினர் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

திண்டிவனம் ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தி

ஆள் பார்க்கத்தான் முரடன்… நிக்கோலாய் சச்தேவ் குழந்தை மாதிரி … வரலட்சுமி Statement