in

பாஜகவை விட குறைந்த வாக்குகள் பெற்றால், கட்சியை கலைத்துவிடுகிறேன்


Watch – YouTube Click

“பாஜகவை விட குறைந்த வாக்குகள் பெற்றால், கட்சியை கலைத்துவிடுகிறேன்”

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகும் நிலையில், பாஜக-வை விட குறைந்த வாக்குகள் பெற்றால் கட்சியை கலைத்துவிடுகிறேன் என சவால் விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சி.பா ஆதித்தனாரின் நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எழும்பூரிலுள்ள அவரது சிலைக்கு மே 24-ம் தேதி மாலை அணிவித்து மரியாதை செய்தார் சீமான்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தென்மாநிலங்களில் பா.ஜ.க தவிர்க்க முடியாத சக்தியாக வரும் என அண்ணாமலை நம்புகிறாரே என கேட்கப்பட்ட கேள்விக்கு, “முதலில் தனித்து நிற்க பா.ஜ.க-வுக்கு துணிவு இருக்கா? ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு தனித்து பா.ஜ.க பெறப்போகும் வாக்குகள் எவ்வளவு எனத் தெரிந்துவிடும். கூட்டணியாக இல்லாமல் தனித்த பா.ஜ.க-வின் வாக்கு சதவீதம் நாம் தமிழர் கட்சியைவிட அதிகமாக இருந்தால் கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன்” என சவால்விட்டார் சீமான்.

தொடர்ந்து, “வாயு கசிவை ஏற்படுத்திய கோரமண்டல் நச்சு ஆலை குறித்து பசுமை தீர்ப்பாயம் வழங்கியிருக்கும் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. தமிழ்நாடு அரசு அந்த ஆலையை திறக்க உத்திரவிடக் கூடாது. குறிப்பாக நாம் தமிழர் கட்சி அந்த நச்சு ஆலையை திறக்கவிடாது” என்றதோடு, `தமிழர்களைத் திருடர்கள் போல சித்தரித்து பேசுகிறார் மோடி.

இதுபோன்ற பேச்சை ஏப்ரல் 19-ம் தேதிக்கு முன்பு பேசியிருக்க வேண்டியதுதானே?’ என வினவினார். மேலும், `சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானத்தை நிறுத்தபட வேண்டும். தி.மு.க-வின் கூட்டணி கட்சிதானே கம்யூனிஸ்ட் அவர்களுடன் பேசி கட்டுமானத்தை நிறுத்த வேண்டியதுதானே’ என கேட்டார்.


Watch – YouTube Click

What do you think?

பூங்காவில் திமுகவினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிமுக நகர்மன்ற உறுப்பினர் கோரிக்கை

தேர்தல் ரிசல்ட் வெளியானதும் புதுச்சேரி சட்டசபை கூட்ட முடிவு