in

திருச்செந்தூர் அருகே பட்டப்பகலில் வீட்டில் வைத்து சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை


Watch – YouTube Click

திருச்செந்தூர் அருகே பட்டப்பகலில் வீட்டில் வைத்து சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை

 

திருச்செந்தூர் அருகே பட்டப்பகலில் வீட்டில் வைத்து சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்யும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் என குற்றச்சாட்டு..

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினம் பூந்தோட்டம் பகுதியில் வசித்து வரும் சேகர் என்ற முதியவர் அவரது வீட்டில் சாக்கு பையில் மறைத்து வைத்து சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்துவரும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சேகர் என்பவர் மதுபாட்டில்கள் விற்பனை செய்துவருவது குறித்து அப்பகுதி மக்கள் ஆறுமுகநேரி காவல் துறையினரிடம் தகவல் கொடுத்தும் இதுவரை சட்ட விரோதமாக பட்ட பகலில் வீட்டில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்துவரும் சேகர் என்பவர் மீது காவல்துறை நடவைக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

விடியா திமுக ஆட்சியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்துவருவது அதிகரித்து வருகிறது.

பகல் இரவு என பார்க்காமல் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதால் இப்பகுதி இளைஞர்கள் குடி பழக்கத்திற்கு தள்ளப்படும் நிலைமை ஏற்பட உள்ளது எனவும், மேலும் முகம் தெரியாத வெளிநபர்களும் வந்து செல்வதால் திருட்டு, கொலை, குழந்தை கடத்தல் போன்ற குற்ற சம்பவங்கள் நடக்கும் அளவிற்கு அச்சம் உள்ளது என்கின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன சோதனை  மதுபானங்கள் பறிமுதல்

கனமழையின் காரணமாக மழை நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த மழை நீர்