in

மதுரை சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு

மதுரை சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் தனி நபருக்கு ஆதரவாக சாலையோரத்தில் உள்ள குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளும் நெடுஞ்சாலை துறையின வரை கண்டித்து இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் சங்கையா கோவில் முதல் விநாயகபுரம் காலனி வரை சாலையின் இரு புறங்களிலும் உள்ள குடியிருப்புகளை ஆக்கிரமிப்பு எனக்கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனிநபர் வழக்கு கொடுத்திருந்த நிலையில் விசாரணை முடிவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்த்துறையினர் மூலம் சாலையின் இருபுறமும் உள்ளஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது

இந்த நிலையில் இந்த பகுதியில் குடியிருக்கும் சுமார் 128 நபர்களுக்கு 15 நாட்களுக்குள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் இல்லையென்றால் அரசே காலி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளும் என நோட்டீஸ் கொடுத்திருந்ததாக தெரிகிறது

இதனால் அதிர்ச்சி அடைந்த 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக இன்று 20க்கும் மேற்பட்டோர்தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில்

முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் சங்கையா கோவில் முதல் விநாயகபுரம் காலனி வரை சாலையின் இருபுறங்களிலும் ஆக்கினிப்புகள் இருப்பதாக கூறி 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் எங்களை காலி செய்ய அரசு வலியுறுத்தி வருகிறது

மேலும் தனி நபருக்கு ஆதரவாக வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினர் செயல்பட்டு வருகின்றனர் இதில் உள்ள 128 நபர்கள் 15 நாட்களுக்குள் தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டுமென நோட்டீஸ் கொடுத்துள்ளனர் மேலும் இது குறித்து எங்களின் கருத்தை கேட்காமலும் அரசு வழக்கறிஞர் தன்னிச்சையாக முடிவு செய்து வருவாய் துறையினரின் தவறான வழிகாட்டுதலை வைத்து சாலையின் இரு புறம் உள்ள இடத்தை அளந்து நோட்டீஸ் கொடுத்துள்ளனர்

வருவாய் துறை அளந்த இடத்தின் வரைபடத்தில் அதிகமான குளறுபடி இருப்பதாகவும் இதனை நீதிமன்றத்தில் முறைப்படி தெரிவிக்காமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்

மேலும் ஆக்கிரமிப்பு என்று சொல்லும் பகுதியில் முள்ளிப் பள்ளம் ஊராட்சி நிர்வாகமே குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி தற்போது கட்டி வருகின்றனர் உண்மையிலேயே ஆக்கிரமிப்பு இருந்தால் அரசே குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் நடவடிக்கை மேற்கொள்ளுமா என்று என்றும் நெடுஞ்சாலை துறைக்கு தேவையான இடம் சாலையின் இருபுறமும் உள்ளபோதும் தனிநபருக்கு ஆதரவாகவும் தனிநபரின் வீட்டு மனைக்கு பாதை அமைக்கும் நோக்கத்துடனும் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வருவாய் துறையினர் செயல்படுகின்றனர் ஆகையால் நீதிமன்றம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு குடியிருப்பவர்களின் வீடுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிட கைவிட அரசுக்கு அறிவுறுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டனர்

What do you think?

கோயில் உண்டியல் உடைப்பு போலீசார் விசாரணை

தொழிலாளர்களுக்கு நிரந்தர இடம் கொடுக்க வேண்டும் என வாதிட உள்ளேன் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி.