in

பழனியில் பாஜகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்


Watch – YouTube Click

பழனியில் பாஜகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் , மேளதாளம் இசைத்தும் நடனமாடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் நடைபெற்றது இதில் கடந்த நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்று மாலை டெல்லியில் பதவி ஏற்பு விழா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர் தொடர்ந்து பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்றதை முன்னிட்டு திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பழனி பாஜக கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். பின்னர் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மேளதாளம் இசைத்தும் நடனம் ஆடியபடி பழனி பேருந்து நிலையம் முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் கட்டிடத்தில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்து நான்கு பேர் படுகாயம்

பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கு திருமணம்