in

திருநெல்வேலி பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் அடையாளம் தெரியாத நபர்கள் வாலிபர் ஒருவரின் பூணூலை அறுத்த விவகாரம்

திருநெல்வேலி பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் அடையாளம் தெரியாத நபர்கள் வாலிபர் ஒருவரின் பூணூலை அறுத்த விவகாரம்

சம்பந்தப்பட்டவரின் வீட்டிற்குச் சென்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ஆறுதல்

மர்ம நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தியாகராஜ நகர் ஐந்தாவது குறுக்குத் தெரு TVS நகரில் வசிப்பவர் வசிப்பவர் 58 வயதான சுந்தர்.

இவரது மகன் ஆன்மீக சமூக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு தியாகராஜ நகர் 14வது தெற்கு தெரு முக்கில் சர்ச் ஒன்றின் அருகே வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் பைக்கில் வந்து அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்துவிட்டு இதுபோல் பூணூலை அணிந்து வரக்கூடாது என்று மிரட்டி விட்டு சென்றதாக பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பெருமாள்புரம் காவல் துறையினர் விசாரித்து வரும் நிலையில் உடனடியாக மர்ம நபர்கள் நான்கு பேரின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தது.

திருநெல்வேலி மாநகரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமிற்காக இன்று காலை வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன் டிவிஎஸ் நகரில் அமைந்துள்ள சுந்தரின் வீட்டிற்கு நேரடியாக சென்று இது குறித்து விசாரித்து அறிந்தார். பின்னர் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த மத்திய அமைச்சர் ட . முருகன்,
காவல்துறையினர் இது குறித்து விரைவாக விசாரித்து மர்ம நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துவிட்டு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

What do you think?

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் லேசான நிலடுக்கம்

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்தநாள் விழா