in

புதுச்சேரியில் பாஜக படுதோல்வி அடைந்த காரணத்தை கூறிய சுயேச்சை MLA நேரு


Watch – YouTube Click

மாநில வளர்ச்சி,மக்கள் பிரச்சனை,அரசு ஊழியர்களின் நலன்,ஆகியவற்றில் கவனம் செலுத்தாததாலே புதுச்சேரியில் பாஜக படுதோல்வி அடைந்தது என்று சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்

இது தொடர்பாக புதுச்சேரியில் உள்ள சமூகநல இயக்கங்களின் நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் நேரு.. முதலமைச்சர் ரங்கசாமி கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். ஆனால் புதுச்சேரியில் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி ஏற்பட்ட பிறகு மாநில அந்தஸ்து பற்றி எந்த மேடையிலும் அவர் வாய் திறக்கவில்லை என்றார்.

புதுச்சேரியை மாநில நிதி கமிஷனில் சேர்ப்பது, மாநில கடன் தள்ளுபடி, மின்துறை தனியார் மயம், உள்ளிட்ட விவகாரங்களில் மக்களுக்கு அரசு மிகப்பெரிய துரோகம் செய்ததாக குற்றம் சாட்டிய நேரு புதுச்சேரியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் தலை விரித்து ஆடுகிறது ஸ்மார்ட் சிட்டி திட்டம் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்றும் பிரதமர் புதுச்சேரி வந்தபோது பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவேன் என்று கூறினார் ஆனால் தற்போது ஒர்ஸ்ட் ஆக மாறியுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

புதுச்சேரியில் ரேஷன் கடையை திறக்காமல் மக்களை வஞ்சித்தது அரசு ஊழியர் நலன், காலி பணியிடம் நிரப்பாதது மக்கள் பிரச்சனைகளை தீர்க்காதது கடந்த மூன்று ஆண்டுகளில் மாநில வளர்ச்சிக்கு எதுமே செய்யாதது போன்ற விவரங்கள் தான் புதுச்சேரியில் பாஜக படுதோல்விக்கு காரணம் என்று சுட்டிக்காட்டிய நேரு தொடர்ந்து ஆட்சியாளர்கள் மெத்தன போக்குடன் மக்கள் மீது அக்கறை இல்லாமல் செயல்பட்டால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலிலும் இதே நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

ஆலன் ஆதித்யா வித்யாஷ்ரம் குருகிராமில் NEET முடிவுகள் கொண்டாட்டம்

திருச்சியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வரும் பறவைகள் பூங்கா 3 மணி நேரம் பொழுதை கழிக்கலாம்