in

காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களின் சைகை மொழியை சமூக வலைதளங்களில் கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட இன்ஸ்டா பிரபலங்கள்

காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களின் சைகை மொழியை சமூக வலைதளங்களில் கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட இன்ஸ்டா பிரபலங்களை கைது செய்ய வலியுறுத்தி மனு  Youtubeர்களின் புகைப்படங்கள் மீது காலணியை கொண்டு அடித்து தங்களது எதிர்ப்பை காட்டிய மாற்றுத் திறனாளிகள்

மதுரையில் உள்ள காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்

அதில் டெல்லியை சேர்ந்த ரோகன் கரியப்பா, சாயன் பட்டாச்சாரியா ஆகிய 2 இன்ஸ்டா பிரபலங்கள் 16 ஆம் தேதி சைகை மொழியில் அருவருக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு உள்ளதாகவும்

வீடியோவில் உள்ள காட்சிகள் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளது எனக் கூற

இன்ஸ்டாவில் உள்ள வீடியோவை நீக்க வேண்டும், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்

முன்னதாக youtube களின் புகைப்படத்தின் மீது தங்களது காலணிகளை கழட்டி அடித்து அவர்களின் புகைப்படத்தை சுக்குநூறாக கிழித்தெறிந்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

What do you think?

ஆடி வெள்ளியை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் கோவிலில் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்த மாரியம்மன்

குயவநடப்பு ஶ்ரீ தர்ம விநாயகர் திருக்கோவில் ஸ்ரீ சோமசுந்தரேஷ்வரருக்கு ஆடி மாத பிரதோஷ திருநாள்