in

முன்னாள் மின்சாரத்துறை அமைச்சருக்கு மின்சாரம் கட் செய்து சோதனையா?

முன்னாள் மின்சாரத்துறை அமைச்சருக்கு மின்சாரம் கட் செய்து சோதனையா? நத்தத்தில் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் – 3 புதிய கட்டிடத் திறப்பு நிகழ்ச்சியில் தொடர் மின்வெட்டு,மைக்கை பிடித்தவுடன் பேசத் தொடங்கியவுடன் மின்சாரத்தை கட் சம்பவம் – கடுப்பான நத்தம் விசுவநாதன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறை,ரெங்கை சேர்வைக்காரன்பட்டியில்,பெரியூர்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.39 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான கட்டிடங்கள் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக சேர்ந்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும் நத்தம் சட்டமன்ற உறுப்பினருமான நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு திறந்து வைப்பதற்காக வந்தார், இந்த நிலையில் முதலாவதாக செந்துறை பகுதியில் அமைந்து உள்ள ரூ.15 லட்சம் மதிப்பிலான புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்து மைக்கில் மைக்கில் பேச தொடங்கிய போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பொதுமக்களிடம் மைக் இல்லாமல் பேசிவிட்டு அடுத்த கிராமத்திற்கு காரில் சென்றார். அதைத்தொடர்ந்து பெரியூர் பட்டியில் உள்ள ரூ.10 லட்சம் மதிப்பிலான நாடக மேடையை திறப்பதற்காக வந்தபோது ஸ்பீக்கரில் அதிமுக கட்சி பாடல் பாடிக் கொண்டிருந்தது. அதைத்தொடர்ந்து ரிப்பன் வெட்டி நாடகமேடு திறந்து வைத்து மேடையில் வைக்க பிடித்து பேச முன் வரும்போது மீண்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்பொழுதும் பொது மக்களிடையே மைக் இல்லாமல் பேசிவிட்டு அடுத்த ரெங்கசேர்வைக்காரன்பட்டிக்கு நியாய விலை கடை திறப்பதற்காக சென்றார். அங்கும் மின்சாரம் வினியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால் கடுப்பான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விசுவநாதன் பொதுமக்களிடையே திமுகவினர் வேண்டுமென்றே செய்கிறார்கள் இதுதான் திமுக ஆட்சி என்றாலே மின்தடை என்பது பழக்கமாகிவிட்டது. என்று மைக் இல்லாமல் பொதுமக்களிடம் பேசினார். மூன்று நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பினார்.

அதைத் தொடர்ந்து அங்குள்ள கட்சியை சேர்ந்தவர்கள் மின்தடை அறிவிப்பு இல்லாமல் மைக்கை தொட்டவுடன் மின்சாரத்தை துண்டிக்கிறார்கள் என புலம்பிக் கொண்டே சென்றனர். முன்னாள் மின்துறை அமைச்சருக்கு சோதனையா? என்ன பொதுமக்கள் பேசினர்.

What do you think?

நாகர்கோவிலில் கொடை விழாவிற்கு உலர் பழங்களால் ஆன ஆள் உயர மாலை கட்டும் கலைஞர்களுக்கு குவியும் பாராட்டு

பழனியில் 53 ஆம் ஆண்டாக ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு விழாவை முன்னிட்டு 500ற்கும் மேற்பட்டோர் கஞ்சி கலைய ஊர்வலம்