in

அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை இதுதான் எங்களின் நிலைபாடு

அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை இதுதான் எங்களின் நிலைபாடு புதுச்சேரி அதிமுக – 50 ஆயிரம் போலி ரேசன் கார்டுகளை வழங்கிய துறை அமைச்சரின் மீது முதலமைச்சர் மற்றும் ஆளுநரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதிமுக போராட்டத்தில் ஈடுபடும் என அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த மாதம் 18-ம் தேதி துணை நிலை ஆளுநர் தலைமையில் திட்டக்குழு கூட்டப்பட்டது. இவ்வாண்டிற்கான மாநில பட்ஜெட்டுக்காக ரூ.12 ஆயிரத்து 700 கோடி என திட்டக்குழுவில் முடிவெடுக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக அரசு ஆட்சியில் உள்ள நிலையில் புதுச்சேரி மாநிலத்திற்கு பட்ஜெட்டிற்கான அனுமதியை 25 நாட்கள் ஆகியும் இதுவரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. பட்ஜெட் அனுமதிக்காக மத்திய அரசிடம் கையேந்தும் நிலை புதுச்சேரி மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இது புதுச்சேரி மாநிலத்தை மத்திய அரசு அவமதிக்கும் செயல் என குற்றஞ்சாட்டியவர் பட்ஜெட்டிற்கான அனுமதியை மத்திய அரசு இதுவரை வழங்காததால் சட்டமன்ற கூட்டத்தொடருக்கான தேதி அறிவிப்பை கூட புதுச்சேரி அரசால் அறிவிக்கப்பட முடியவில்லை என்ற அவல நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்த அவர்

புதுச்சேரியில் கையூட்டு பெற்றுக்கொண்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீ ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டதில் ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.36 கோடிக்கு மேல் அந்த போலீ ரேஷன் கார்டுகளுக்கு அரசின் பணம் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக ஆதாரத்துடன் பல்வேறு குற்றச்சாட்டுகளை அரசின் கவனத்திற்க கொண்டு சென்றும் ஆளும் அரசு இந்த விவகாரத்தில் எவ்விதமான நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பது ஏன் என கேள்வியெழுப்பியவர், இதில் ஒளிவு மறைவு இல்லாமல் மிகப்பெரிய ஊழலும், முறைகேடும் நடைபெற்று இருந்தும் அரசு அதிகாரிகளின் ஊழல் தடுப்பு பிரிவு ஒன்று இருக்கிறதா என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. இந்த முறைகேடுகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இதற்கு மேலும் ஆளும் அரசு இந்த விஷயத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் புதுச்சேரி அதிமுக சார்பில் இந்த அரசை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதிமுகவை எதிர்த்து நீதிமன்றம் சென்ற அனைவரும் விரோதிகள் தான் அதிமுகவிற்கும்
சசிகலாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என பலமுறை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் தெளிவுபடுத்தியுள்ளார். அதன்படி இந்த இயக்கத்திற்கும் சசிகலாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுதான் புதுச்சேரி அதிமுகவின் நிலைபாடும் என்றார் அன்பழகன்.

What do you think?

அரசு அனுமதித்துள்ள நேரத்தை தாண்டி சாராயம் விற்பனை செய்தால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை.

குண்டாஸ் வழக்கு பதியப்படும் என அறிவித்த காவல்துறையை கண்டித்து அனைத்து சாராயக்கடை உரிமையாளர்களும் உரிமத்தை சரண்டர்