in

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும்


Watch – YouTube Click

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தல 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்

புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பகுதியில் உள்ள புது நகரில், கழிவறையில் இருந்து விஷ வாயு வெளியானதில் மூன்று பெண்கள் உயிரிழந்தனர். மேலும், மூச்சுத் திணறல் காரணமாக ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என புதுவை அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் -பாஜக கூட்டணி அரசின் அலட்சியத்தால் 3 பேர் இழந்துள்ளனர் என்று குற்றம் சாட்டினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தல 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.


Watch – YouTube Click

What do you think?

ஐஸ்வர்யா-உமாபதி திருமண புகைப்படங்கள்

சிறைவாசிகளுக்கு சிறு தானிய உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி