in ,

காஞ்சிபுரம் அன்னை ரேணுகாம்பாள் சிவன் சக்தி அலங்கரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்

காஞ்சிபுரம் அன்னை ரேணுகாம்பாள் சிவன் சக்தி அலங்கரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்

 

காஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு அன்னை ரேணுகாம்பாள் ஆலயத்தில் 49 ஆம் ஆண்டு ஆடிப் பெருவிழா விமர்சையாக துவங்கியது.

இதில் அம்பாளுக்கு அனு தினமும் பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது அந்த வகையில் இன்று சிவன் சக்தி அலங்காரத்தில் சிறப்பு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து விஜய் குடும்பத்தினரின் மேஜிக் ஷோ நடைபெற்றது. .இன்றைய விழா உபயத்தினை SVN பிள்ளைத்தெருவை சேர்ந்த சுப்பிரமணிய முதலியார் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

ஆலய நிர்வாகம் சார்பில் மலர்மாலைகள் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளின் பேரருளை பெற்று சென்றனர்.

What do you think?

எந்த படத்திற்கும் இவ்வளோ கஷ்டப்பட்டதில்லை…விக்ரம்

திருவாரூர் காட்டூரில் பொற்பவள காளியம்மன் கோயில் காளிகட்டுத் திருவிழா