in ,

காஞ்சிபுரம் ஸ்ரீதேவி பூதேவியுடன் விளக்கொளி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

காஞ்சிபுரம் ஸ்ரீதேவி பூதேவியுடன் விளக்கொளி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்

காஞ்சிபுரத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான விளக்கொளி பெருமாள் ஆலயத்தில் நேற்று மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது இதனைத் தொடர்ந்து இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் மேள தாளங்களுடனும் வானவேடிக்கைகளுடனும் வலம் வந்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் நெய்வேத்தியங்கள் மற்றும் தீபாரதனைகள் சமர்ப்பித்து வழிபாடு செய்தனர் இவ்விழாவை ஒட்டி காஞ்சிபுரம் சேத்திரக் கலா மந்திர் பரதநாட்டிய மாணவிகளின் சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் விழாவின் முடிவில் மாணவிகளுக்கு 35 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரமணி பொன்னம்பலம் பொன்னாடைகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார் இதில் தெருவாசிகள் மற்றும் விழா குழுவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மாணவிகளை வாழ்த்தினார்கள்.

What do you think?

காஞ்சிபுரம் சித்தீஸ்வரர் ஆலயத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா

வளர்ச்சி என்பது இங்கிலாந்தின் ‘தேசிய பணி’ – ரேச்சல் ரீவ்ஸ்