in

வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலில் கார்த்திகை வழிபாடு

வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலில் கார்த்திகை வழிபாடு

 

வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலில் கார்த்திகை வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தையல் அநாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.

தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் நவகிரகங்களில் செவ்வாய் பகவான், தன்வந்திரி சித்தர் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர். இங்கு முருகனின் ஆறுபடை வீட்டிற்கு இணையாக செல்வமுத்துக்குமாரசாமி தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.

கார்த்திகை திருநாளன்று செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். பங்குனி மாத கார்த்திகை நட்சத்திர நாளான இன்று காலை செல்வ முத்துக்குமார சுவாமி சன்னதியில் இருந்து சண்முகர் மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டார்.

தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு பால் தயிர் பஞ்சாமிர்தம் இளநீர் மற்றும் வாசனை திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை நடைபெற்றது. இதில் வைத்தீஸ்வரன் கோவில் தம்பிரான் கட்டளை மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை மனமுருக பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.

What do you think?

கீரனூரில் தேரினை தலையில் சுமந்து சென்று கிராம மக்கள் நூதன வழிபாடு

மயிலம் ஸ்ரீ முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்